யாழ். தென்மராட்சிக்கு இம் முறை இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள்

Colombo Jaffna Gun Shooting Dr.Archuna Chavakachcheri National People's Power - NPP
By Sahana Nov 17, 2024 01:03 AM GMT
Sahana

Sahana

Report

சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இராமநாதன் அர்ச்சுனாவும் , தேசிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட கருணை நாதன் இளங்குமரனும் தெரிவு செய்யப்பட்டு தென்மராட்சியின் இரட்டைப்பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டி பெருமைக்குரியவர்களாக திகழ்கிறார்கள் என 

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 50 மில்லியன் டொலர் கடனுதவி

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 50 மில்லியன் டொலர் கடனுதவி

நவரத்தினம் ,ந.ரவிராஜ் ஆகியோர் தென்மராட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டியிருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இராமநாதன் அர்ச்சுனாவும் , தேசிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட கருணை நாதன் இளங்குமரனும் தெரிவு செய்யப்பட்டு தென்மராட்சியின் இரட்டைப்பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டியுள்ள பெருமைக்குரியவர்களாக திகழ்கிறார்கள்.

திரு.நவரத்தினம் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக சாவகச்சேரி தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

யாழ். தென்மராட்சிக்கு இம் முறை இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் | Two Parliamentary Representations South Marathis

மார்ச் 1960,1965, 1970 தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1958 இனக்கலவரங்களை அடுத்து நவரத்தினம் உட்பட தமிழரசுக் கட்சித் தலைவர்கள் 1958 இல் சிறையிலடைக்கப்பட்டனர்.

1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தை நவரத்தினம் முன்னின்று நடத்தினார். தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் 1972 அக்டோபரில் தனது நாடாளுமன்ற இருக்கையைத் துறந்ததை அடுத்து நவரத்தினம் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவரானார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நவரத்தினம் இருந்து செயல்பட்டார். 1977 தேர்தலில் நவரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சாவகச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு யூலை வன்முறைகளில் சிங்களவர்களாக 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நவரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை பகிஸ்கரித்தார்கள். 

யாழ். தென்மராட்சிக்கு இம் முறை இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் | Two Parliamentary Representations South Marathis

மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள். ந.ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார்.

1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

யாழில் கௌசல்யாவிடம் தோல்வியடைந்த சுமந்திரன்!

யாழில் கௌசல்யாவிடம் தோல்வியடைந்த சுமந்திரன்!

2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெண தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் உயிரிழந்தார்.

வே.குமாரசுவாமி அவர்கள் சட்டக்கல்லூரியில் படிக்கும் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

1948 ஆம் ஆண்டில் தமிழ் காங்கிரஸ் சேனாநாயக்கவின் அரசில் இணைந்ததை அடுத்து குமாரசுவாமி நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.பதில் நிதி அமைச்சராகவும், பதில் உணவு, விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.

1952 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1953 ஆம் ஆண்டில் தமிழ்க் காங்கிரசு கட்சி அரசில் இருந்து விலகினாலும், வே.குமாரசுவாமி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தார்.

பிரபல ஹோட்டலில் வௌிநாட்டு பெண் துஷ்பிரயோகம்!

பிரபல ஹோட்டலில் வௌிநாட்டு பெண் துஷ்பிரயோகம்!

ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து குமாரசுவாமி 1956 இல் அக்கட்சியை விட்டு வெளியேறினார். குமாரசுவாமி 1956 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தமிழரசுக் கட்சி வேட்பாளர் வி. என். நவரத்தினத்திடம் தோற்றார்.

பின்னர் மார்ச் 1960,1970 தேர்தல்களில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நவரத்தினத்திடம் தோற்றார்.

குமாரசாமி 1978 மார்ச் 10 ஆம் நாள் தனது 58-ஆவது அகவையில் காலமானார். இதன் பின் நீண்ட இடைவெளியின் பின் இன்று இளம் தலைமுறையினர் இருவர் பாராளுமன்றம் செல்கின்றனர்.

11 வயதான சிறுமியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்!

11 வயதான சிறுமியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்!

மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US