சிவராத்திரி பூசைக்கு செல்வதாக கூறிச்சென்ற இரு குடும்பஸ்தர்கள் பலி
மட்டக்களப்பில் மதுபோதையுடன் ஆற்றில் குளித்த குடும்பஸ்தர்கள் இருவர் சேற்றுக் குழியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றையதினம்(08) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த இருவரும் நேற்றையதினம்(08) சிவராத்திரி பூசைக்கு கோயிலுக்குச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு தமது நண்பர்கள் ஐந்து பேருடன் மட்டக்களப்பு சந்தனமடு ஆற்றில் குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
சேற்றுக் குழியில் சிக்கி பலி
அங்கு பகலுணவு செய்வதற்குத் தாமதம் ஏற்பட்டதனால் மதுபானம் அருந்திவிட்டு இருவரும் மீண்டும் ஆற்றில் குளிக்க சென்றபோது சேற்றுக் குழியில் சிக்கியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவர்களை மீட்க பொதுமக்கள் ஈடுபட்டபோதும் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து உடலங்கள் மீட்கப்பட்டு சந்திவெளி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு , திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் விசாரணைகளை மேற்கொண்டார்.
இதையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 33 வயதுடைய கூலித் தொழிலாளி ஒருவரும். ஒரு குழந்தையின் தந்தையான உழவு இயந்திர சாரதியுமே உயிரிழந்துள்ளனர்.