அம்பாறையில் மான் கொம்புகளுடன் கைதான இருவர்! சிக்கிய அபாய பொருட்கள்
அம்பாறையில் இரண்டு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை - தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மிருக வேட்டையில் ஈடுபடுவதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்மவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய இன்றையதினம் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஜனோசன் தலைமையிலான குழுவினர் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசமிருந்து இரண்டு மான் கொம்புகள், ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் -19 , எல்.எம்.ஜி ரக தோட்டாக்கள் - 03 , எம்.16 ரக தோட்டாக்கள் - 48 உள்ளிட்ட வெடி பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
கைதனவர்களிடம் தற்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.