சட்டவிரோத மதுபான உற்பத்தி ; அதிரடியாக இருவர் கைது
நீர்கொழும்பு மற்றும் பாதுக்க பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட மதுபானங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்க்ரின் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 67.5 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாதுக்க, உடுமுல்ல பகுதியில் ஹோமாகம குற்றப் புலனாய்வு பிரிவனரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு நிலையமொன்று முற்றுகையிடப்பட்டது.
இதன்போது 67.5 லீற்றர் காய்ச்சப்பட்ட மதுபானம், மதுபானம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 1080 லீற்றர் (06 பீப்பாய்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டன.
இதன் போது பாதுக்க பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.