மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; திடீர் சுற்றிவளைப்பில் இருவர் கைது
கம்பகா பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களனி பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 பெண்கள் பேலியகொடை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (08) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 34 மற்றும் 53 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.