திருகோணமலை நோக்கி சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் வைத்தியசாலையில்!
அனுராதபுரத்தில் இருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த சொகுசு கார் ஹொரவப்பொத்தானை யான் ஓயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றையதினம் (13-07-2024) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹொரோவ்பதான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினர் திருகோணமலை பகுதிக்கு தனிப்பட்ட தேவைக்காகச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.