முல்லைத்தீவில் இராணுவத்தால் உயிரிழந்த இளைஞனுக்கு தமிழ் அரசுக்கட்சி அஞ்சலி
முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டுப்பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவுமாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியினரால் உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகளின் தவிசாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்டபலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இராணுவத்தின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏசுமந்திரன் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.