இலங்கையில் 12,500 ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட நிலை!
ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்ட விடயம் தொடர்பாக கல்வியமைச்சுடன் கலந்துரையாடுவதற்கு நாளையதினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று உத்தரவிட்டிருந்தார்.
ஆசிரியர் இடமாறுதல் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுகின்ற நிலையில் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் சாதகமான பதில் கிடைக்காவிடின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக அரசாங்கம் கடந்த 17ஆம் திகதி அறிவித்திருந்த போதும் தொழிற்சங்கங்கள் அதனை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.