குடும்ப பெண்னின் உயிரைப் பறித்த மின்சாரவேலி
மின்சாரவேலியில் சில்லி இரு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதியம் தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில், வீட்டிற்கு பின்புறத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி குறித்த தாயார் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 48 வயதுடைய ஏ.எம்.சந்திரலதா என்பவரே உயிரிழந்துள்ளார் குறித்த வீட்டார்கள் தங்களது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த பெண், ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும் இன்றைய தினம் அதனை மறந்து சென்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின், பிரேத பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.