நான்கு வலம்புரிச் சங்குடன் மூவர் கைது
திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் நான்கு வலம் புரி சங்குகளுடன் இன்று மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது குறித்த சங்குகளை விற்பனை செய்வதற்காக ஈடுபட்ட வேலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
குறித்த சங்குகளின் மொத்த பெறுமதி நான்கு கோடியே 75 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது வவுனியா பகுதியை சேர்ந்த (45)வயதுடையவரும் இஇறக்கக் கண்டி பகுதியைச் சேர்ந்த வயது (39) வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்
குறித்த சங்குகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் விசாரனை மூலம் தெரியவருகிறது. இவர்கள் மூவரையும் ரூபா 05 இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 25.03.2025 ஆம் திகதி அன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.