பிரான்ஸில் கல்லூரி ஒன்றில் தோன்றிய அச்சுறுத்தல்! அவசரமாக வெளியேறிய மாணவர்கள்
பிரான்ஸில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று (30) செவ்வாய்க்கிழ்மை பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் Beaulieu-sur-Mer (Alpes-Maritimes) நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது பேராசியர் ஒருவர் திரை பெருக்கி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, திடீரென திரையில் அச்சுறுத்தல் காட்சி ஒன்று தென்பட்டுள்ளது.
இதேபோல இரு முறை அடுத்தடுத்து அச்சுறுத்தல் தென்பட்டதால் பேராசியர் பாடசாலை நிர்வாகத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, கல்லூரியில் இருந்தவர்களை அவசரமாக வெளியேற்ற தீர்மானித்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் கல்லூரியை விட்டு வெளியேற்றினர்.
பின்னர், இதுகுறித்து காவல்துறையினருக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் வழங்கிய நிலையில், குறித்த கல்லூரிக்கு விரைந்த காவல்துறையினர் மோப்ப நாய் பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடத்தினர்.
பின்னர் கல்லூரி வளாகத்துக்குள் ஆபத்து எதுவும் இல்லை என தெரியவந்ததும் மீண்டும் கல்லூரி வழமைக்குத் திரும்பியது.
திரையில் தோன்றிய அச்சுறுத்தல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.