ஒரு நாளைக்கு இவ்வளவு உப்பு போதும் : இதய நோய் பிரச்சினையே வராது
ஒரு நாளில் அதிகப்படியாக உப்பை சேர்த்து கொண்டே போவது ஆபத்தானது மற்றும் பல கடும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உப்பை அளவாகவே தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும்.
நமது பல அன்றாட உணவுகளில் உப்பு இல்லாமல் மற்ற சுவைகள் இருந்தாலும், அந்த உணவினை ருசித்து உண்ண இயலாது.
ஆனால் உணவு மிகவும் சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு நாளில் அதிகப்படியாக உப்பை சேர்த்து கொண்டே போவது ஆபத்தானது மற்றும் பல கடும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உப்பை லிமிட்டாகவே தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற அபாயங்கள் தடுக்க உப்பு நுகர்வை கணிசமாக குறைத்து கொள்ள எப்போதுமே மருத்துவர்கள்தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
அளவுக்கு அதிகமான சோடியம் நுகர்வு காரணமாக ஆண்டுதோறும் சராசரியாக 1.89 மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டுள்ளது.
சோடியம் நுகர்வை குறைப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மிக எளிய வழியாகும் மற்றும் இப்பழக்கம் இதய நோய் அபாயங்களை குறைக்கிறது.
ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு உப்பை மட்டுமே ஒருவர் எடுத்து கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
ஆனால் மதிப்பீடுகளின்படி தினமும் ஒருவர் சராசரியாக 10.78 கிராம் அளவு உப்பை எடுத்து கொள்கிறார். WHO பரிந்துரைத்திருக்கும் அளவைவிட இது 2 மடங்கு அதிகம் ஆகும்.
ஒருவர் தனது தினசரி உணவில் ஒரு டீஸ்பூன் உப்பை மட்டுமே எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
அதே நேரம் 2-15 வயதுள்ள குழந்தைகள் தினசரி ஒரு டீஸ்பூன் உப்பை விட குறைவாக எடுத்து கொள்ள வேண்டும்.
பல வகை உப்பு கடைகளில் கிடைக்கும் நிலையில் அனைவரும் குறிப்பாக கர்ப்பிணிகள் அயோடின் கலந்த உப்பை மட்டுமே எடுத்து கொள்ள உலக சுகாதார அமைப்பு மக்களை வலியுறுத்தி உள்ளது.
ஏனென்றால் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு அயோடின் மிக அவசியம். தவிர பொதுவாக அயோடின் மக்களின் மன செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
எனவே நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள விரும்பினால் தினசரி நீங்கள் எடுத்து கொள்ளும் உப்பின் அளவில் கவனமாக இருங்கள், நாளொன்றுக்கு 5 கிராம் என்ற அளவிலேயே உங்கள் உணவில் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.