அதிகளவானோர் உயிரிழக்க காரணம் இதுதான்; இரகசியத்தை போட்டுடைத்த இராணுவ தளபதி
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய காலத்தை கடந்து தொற்று உக்கிர நிலையை அடைந்தகையுடன் மருத்துவமனைகளுக்கு நோயாளர்கள் சேர்வதால்தான் நாட்டில் மரணங்களும், நெருக்கடியும் ஏற்படுவதாக இராணுவத் தளபதியும், கோவிட் ஒழிப்பு படையணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
கண்டி – ஸ்ரீ தலதா மாளிகைக்கு தனது இன்று அதிகாலை இராணுவத் தளபதி விஜயம் செய்தார். இராணுவத் தளபதி தலதா மாளிகையில் வழிபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இதன்போது அவர் கூறுகையில், கொரோனா நோயாளர்களால் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய காலத்தை கடந்து தொற்று உக்கிர நிலையை அடைந்தகையுடன் மருத்துவமனைகளுக்கு நோயாளர்கள் சேர்வதால்தான் மரணங்களும், நெருக்கடியும் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கோவிட் ஒழிப்பு படையணியை அமைச்சரவை நிர்வகிக்காமல், இராணுவம் நிர்வகிப்பதால்தான் தொற்று ஒழிப்பு செயற்பாடுகள் தோல்வியடைவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த குற்றச்சாட்டையும் இராணுவத் தளபதி இதன்போது முற்றாக நிராகரித்தார்.