இலங்கையில் சிறுமியைக் கடத்திய இளைஞன்
கொடிகாமம் பகுதியில் ஆறு வயது சிறுமியை கடத்தியது தொடர்பில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் பூநகரியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமி கொடிகாமத்தில் உள்ள பேர்த்தி வீட்டில் தங்கியிருந்தார். சிறுமி நேற்று அயல் வீட்டில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் வேளையில் பக்கத்து வீட்டு இளைஞன் சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் கயிற்றினால் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளார்.
அதன்பின்னர் சிறுமியின் உறவினருக்கு சிறுமியின் தந்தை வந்தால்தான் சிறுமியை விடுவிப்பேன் எனக் கூறினார். முன்னதாக இளைஞனுக்கும் சிறுமியின் தந்தைக்கும் நகைப்பு பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதனடிப்படையில் கொடிகாமம் போலீசார் 25 வயது இளைஞனை கைது செய்து சாவகச்சேரி நீதிமாற்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.