கணவனை 22 துண்டுகளாக வெட்டி எறிந்த மனைவி;அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்!
இந்தியாவில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவனை கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப்பெட்டியில் மனைவி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை மனைவி, மகன் உதவியுடன் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசி உள்ளமை டெல்லியை பதற வைத்துள்ளது. டெல்லி கிழக்கில் இருக்கும் பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ்.
கள்ளத்தொடர்பை விடவில்லை
இவரது மனைவி பூனம். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறான். அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து கணவனுக்கு தூக்க மருந்தை கொடுத்து கொலை செய்த பின்னர் கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டி மகன் உதவியுடன் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்.
குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசியுள்ளார்.
கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகள்
கண்காணிப்பு கெமராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகி இருந்ததுடன் அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வது பதிவாகி இருந்தது.
கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் பொலிஸார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்தபோது சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
அதேவேளை அண்மையில் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அவரது உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.