யாழில் பாடசாலை மாணவன் செய்த செயல் ; பொலிஸார் தேடல்
யாழில் நபர் ஒருவர் வீடொன்றினை முற்றுகையிட்டு சேதப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இவர் அவ் வீட்டின் கடாஹவுகள் வாளால் வெட்டியும் கற்களால் எறிந்தும் சேதப்படுத்தி உள்ளார்.
இச் சம்பவம் யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தாய் ஒருவர் மிகுந்த அச்சம் கொண்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
காரணம்
நேற்றைய தினம் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கல்வியற்கல்லூரி மாணவர் ஒருவரே வாளுடன் வந்து அச்சுறுத்தியதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.