மறைந்த நடிகர் விவேக்கின் சாம்பலை என்ன செய்தார்கள் தெரியுமா! யாராவது இப்படியும் செய்வார்களா?
கடந்த ஏப்ரல் 17ம் தேதி காலை தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயம் அமைந்தது. அதாவது காமெடி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு முன்னாள் வரை மிகவும் ஆக்டீவாக இருந்தார். சுறுசுறுப்பாக இருந்தாரே என அவரது மறைவை கேட்ட அனைவருமே இப்படி தான் யோசித்தார்கள்.
விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மரக்கன்று நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் சாம்பலை அவரது சொந்த ஊரான மதுரையில் உள்ள பெருங்கூதூரில் பூஜை செய்துள்ளனர்.
அதன்பிறகு அதை மண்ணில் போட்டு அதற்கு மேல் ஒரு மரக்கன்று நட்டுள்ளார்கள். அவர்கள் செய்த விஷயம் வெளியாக மக்கள் இதைவிட அவரது ஆன்மாவிற்கு சாந்தி தரும் விஷயம் எதுவும் இருக்காது என கூறி வருகின்றனர்.