கொழும்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து ; இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்
கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகமை பகுதியில் இன்று லபுகம நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை விநியோகம் செய்யும் பெரிய குழாயில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி குழாயில் மோதியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (2024.06.17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நீர் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் பாரியளவு நீர் வெளியேறி வருவதுடன், குறித்த இடத்தில் உள்ள மின்கம்பமும் உடைந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிக்கிய கார் சாரதி உட்பட இருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகி தண்ணீர் குழாயில் மோதி கவிழ்ந்துள்ளது.
இந்த நீர் குழாயில் ஏற்பட்ட பாரிய சேதம் காரணமாக கொடகமை, ஹோமாகம, பன்னிபிட்டிய, பெலன்வத்தை, ருக்மல்கம, மத்தேகொடை உள்ளிட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் சிறிது நேரம் தாமதமாகலாம் என நீர் வழங்கல் சபையின் மஹரகம வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.