கிளிநொச்சியில் 20 வயது இளைஞனின் உயிரை பறித்த அதிவேக பயணம்!
கிளிநொச்சி பகுதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதில் விபத்துக்குள்ளாகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த 20 வயதான பொ.அபிசாகன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் கடந்த 26ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதலுடன் மோதியது.
விபத்தின் போது, இளைஞன் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.
இந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.