தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு...பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை
தமிழ் இளைஞர்கள் 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழுக்கு தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008 - 2009 காலப்பகுதியில் கொழும்பு மாகாணத்தில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இது தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்வதில்லை என அதிபர் திணைக்களம் எடுத்த முடிவுக்கு எதிராக மேன்முறையீட்டு செய்யப்பட்ட ரிட் மனுவில் மேற்கோள் கட்டப்பட்ட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளான வசந்த கரன்னகொட மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவானது காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களால் போடப்பட்ட மனுவாகும்.