உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் தமிழன்!
உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லாவின், சாரதி இல்லாமல் தானாகவே இயங்கும் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி (Ashok Elluswamy) முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon Musk) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
அதில், டெஸ்லாவின் மின்சார வாகன ‘ஆட்டோ பைலட்’ குழுவுக்கு முதல் ஊழியராக அசோக் எல்லுசாமி பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
Elon on Teslas Autopilot team: Ashok is actually the head of Autopilot engineering. Andrej is director of AI; People often give me too much credit & give Andrej too much credit. The Tesla Autopilot AI team is extremely talented. Some of the smartest people in the world. @elonmusk pic.twitter.com/a6vJ64aphG
— Sawyer Merritt (@SawyerMerritt) December 29, 2021
அதோடு தானாகவே இயங்கும் பொறியியல் நுட்பத்திற்கான பணிக்கு அசோக் (Ashok Elluswamy) தலைமை தாங்கி குழுவை வழி நடத்திச் செல்வார் என்றும் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.