திரைப்பட பாணியில் இடம்பெற்ற சம்பவம்: இலங்கையில் பெண் ஒருவர் அதிரடி கைது!
கட்டுநாய்க்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் சுமார் 100 கொக்கேய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது சம்பவத்தில் உகண்டா நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
உகண்டாவில் இருந்து கட்டார் இராச்சியத்தின் தோஹா ஊடாக கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 இலக்க விமானத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் குறித்த பெண் இலங்கை வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேற இருந்த ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிட்ட போது இந்த கொக்கேய்ன் தொகை அந்த பெண் வயிற்றில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சோதனை மேற்கொண்ட அதிகாரிகளிடம் தனது வயிற்றில் 100 உருண்டைகள் உள்ளதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை 51 உருண்டைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.