சுரேஷ் சலே ரிட் மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் ரிட் மனு வை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, சுரேஷ் சலே ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொள்ளப்பட்டதை அடுத்து, குறித்த மனுவை நாளை மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையான திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.