தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கூட்டமைப்பு முக்கியஸ்தர்!
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஈழத் தமிழர்களின் நலனிற்காக எடுத்த நடவடிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருமான எம்ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,
இந்தியா-தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் வசிக்கும் எமது ஈழத்தமிழர்களின் நலன்கருதி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக கூட்டமைப்பின் சார்பில் அவருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க ஆலோசித்துள்ள 317 மில்லியன் ரூபா திட்டத்தில் அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிரந்தரமான வதிவிட வசதிகளை ஏற்படுத்துதல்,
Tamil National Alliance Spokesperson and Hon’ble MP @MASumanthiran, Sri Lanka expresses gratitude to Chief Minister @mkstalin for extending welfare measures to Sri Lankan Tamil refugees living in special camps in the state. #TNAssembly #SriLankanTamils pic.twitter.com/MWy2UWAtrK
— Dravidian Professionals Forum (@DravidianForum) August 27, 2021
ஈழத் தமிழர்களின் எதிர்கால நலன் கருதிய வளர்ச்சித் திட்டங்களுடன் அவர்களின் உயர்கல்விக்கான உதவித் திட்டம் மற்றும் தாயகத்திற்கு மீள குடியமர விரும்புகின்றவர்கள் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுப்பதற்கான குழுவினையும் அமைத்து ஆக்கபூர்வமாக நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
மேலும் முதன்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்துள்ளதோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளமையானது ஓர் ஆக்கபூர்வமான செயலாகும்.
இதற்காக எமது மக்கள் சார்பாகவும் கூட்டமைப்பு சார்பிலும் உளம் கனிந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.