எம்பி இளங்குமரனை விடாது துரத்தும் எம்.ஏ.சுமந்திரன்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , எம்பி இளங்குமரன் மீது தொடர்ந்தஅவமதிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிமன்றுக்கு வெளியில் வெளியிட்ட பகிரங்கக் கருத்து மூலம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இழைத்தார் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுமந்திரன் முன்னிலையான வழக்கு தொடர்பில் அவமதிப்பு செய்ததாக எம்பி இளங்குமரன் மீது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இளங்குமரன் எம்.பி. இந்தியா செல்கின்றமையால் வழக்கைப் பிறிதொரு நாளுக்கு ஒத்திவைக்குமாறு அவர் ஏற்கனவே மனு செய்திருந்தார்.
அவரது மனுவின் அடிப்படையில், வழக்கைப் பிறிதொரு திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது