இலங்கையில் பார்வையற்றோர் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் பார்வைக் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இலங்கை கண் பராமரிப்பு ஒளியியல் சங்கம் (CECOA) தெரிவித்துள்ளது.
அத்துடன் உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பார்வை குறைபாடுகள் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கண் மருத்துவ மனைகளுக்குச் செல்லும் பெரும்பாலான மக்களில் 80 சதவீதமானவர்கள் பார்வையை இழந்துள்ளதாகவும், 80 சதவீதம் சேதத்திற்குப் பின்னர், பார்வையை மீட்டெடுக்க வழி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் தொலைபேசிகளிலும் கணினிகளுக்கு முன்பும் தங்கள் நேரத்தை செலவழித்ததாக தெரிவித்த அவர்கள், பெரும்பாலான குழந்தைகள் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இணைய தளங்களைப் பயன்படுத்தி தங்கள் படிப்பைத் தொடர வேண்டியிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான காரணங்களால் நாட்டில் பார்வையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இது பாரிய ஆபத்தானது என்றும் அச்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.