கல்முனையில் தனியார் வைத்தியசாலைகளில் திடீர் பரிசோதனைகள்!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற தனியார் வைத்தியசாலைகளில் எழுமாறான பரிசோதனைகளை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுடன் இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் மேற்கொண்டுள்ளனர்.
காலாவதித்திகதி, மயக்க மருந்துகளின் பாவனை, மருந்துகளின் விலை, களஞ்சியப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் (17-08-2023) நீண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பரிசோதனைகளில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ. எல்.எம் றிபாஸ், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்வாண்மை சுகாதாரப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம் பௌசாத், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் பிராந்திய மேற்பார்வை மருந்தாளர் திருமதி இந்திரகுமார் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.