ஆறுமுகன் தொண்டானின் உருவப்படத்திற்கு மலர்தூவி நினைவு கூர்ந்த இந்திய முக்கியஸ்தர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் (Subramanian Swamy) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு (Jeevan Thondaman) இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் ஜீவன் தொண்டமானின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டானின் நினைவாக அவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பரஸ்பர உறவு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.