திணறிய இந்திய அணி...பாகிஸ்தானுக்கு 152 ஓட்டங்கள் இலக்கு
உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலககோப்பை போட்டி இன்று துபாயில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.
இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது ரோஹித் ஓட்ட எண்ணிக்கை ஏதும் எடுக்காமலும் கே எல் ராகுல் 3 ஓட்டங்களிலும் சகின் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 11 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்தியா நெருக்கடிக்கு உள்ளானது. இதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்ந்து சிறப்பாக ஆடினார்.
சிறப்பாக ரிஷப் பண்ட் 30 பந்துகளில் 39 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய கேப்டன் விராத் கோலி 57 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள்எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் சகின் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் பாக்கிஸ்தான் அணிக்கு 152 ஓட்டங்கள்வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.