பயணிகளுக்கு அவசர அறிவிப்பு ; திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவைகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கான வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதற்கமைய, துபாய்க்கான வானூர்தி சேவைகள் இன்றும், நாளையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், தமாம், தோஹா குவைத் ஆகிய நாடுகளுக்கான வானூர்தி சேவைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பயண முன்பதிவுகளை செய்தவர்கள் தங்களின் போக்குவரத்து தொடர்பில் 1979 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகங்களுக்குச் சென்று, வானூர்தி சேவைகள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.