60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி!
60 வயது மேற்பட்டவர்ளுக்கு சைனோபார்ம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் னாய் தொற்றால் இலங்கையில் அதிகபடியான மக்கள் தொற்றுக்கு ஆளாகின்றனர் பலர் அதனால் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர இலங்கை இராஜாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வந்தது.
இந்த நிலையில் எவ்வித ஒவ்வாமையையும் கொண்டிராத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசியை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசி எடுத்து வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.