இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாடு திரும்பலாம்
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்துள்ல நிலையில் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்ய இலங்கை தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று (19) ஒரு நாளில் மட்டும் நான்கு இலங்கையர்கள் இலங்கைக்குப் புறப்படுவதற்கு வசதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலில் விடுமுறை நாட்களான இன்று (20) மற்றும் நாளை (21) தூதரகம் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
விடுமுறை நாளிலும் தூத்ரகம் திறப்பு
இலங்கைக்கு வந்திருப்பவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஜூன் 14 ஆம் திகதி போர் தொடங்கிய பின்னர் ஒருவரின் விசா காலாவதியாகியிருந்தால், சர்வதேச விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும்போது, விமான நிறுவனங்களால் அவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விசா காலாவதியாகிவிட்டாலும், அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க டிக்கெட்டுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் திரும்பி வருவதற்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.
நேற்று, நான்கு இலங்கையர்கள் இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாகத் தூதரகத்திற்கு வந்தனர். அதன்படி, கெய்ரோவில் உள்ள எங்கள் இலங்கைத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்தோம்.
அவர்களை எல்லைக் கடப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டோம். வரும் நாட்களில், மேலும் பல இலங்கையர்கள் இவ்வாறு இலங்கைக்குத் திரும்ப விரும்புவார்கள் என நம்புகிறேன்.
தூதராக, அவர்கள் அனைவருக்கும் உதவ விரும்புகிறேன். இன்றும் நாளையும் இஸ்ரேலில் விடுமுறை நாட்களாக இருந்தாலும், இத்தகையவர்களுக்கு உதவுவதற்காக தூதரகத்தைத் திறந்து வைத்துள்ளதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.