மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் இருந்து ஓடிவந்த இரு சிறுவர்கள்
மட்டக்களப்பு காத்தான்குடி சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து வெளியேறிய சிறுவர்கள் இருவர் திரும்பவும் இல்லத்தில் ஒப்படைக்கபப்ட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் (19) கல்முனையில் இருக்கும் உறவை பார்க்க ஆசையில் இல்லத்திற்கு தெரியாமல் பேரூந்து ஒன்றில் ஏறி வந்துள்ளார்கள். கல்முனைக்கு போவதாக சொல்லி யிருக்கிறார்கள்.
இடைநடுவில் இறக்கிவிட்ட பேருந்து
எனினும் அவர்கள் பயணித்த பேருந்து மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் சிறுவர்களை இறக்கிவிட்டுள்ளது.
பயத்துடன் இரண்டு சிறுவர்களும் ஓடி வந்திருக்கிறார்கள் . இந்நிலையில் பொதுமக்கள் பிடித்து உணவு கொடுத்து பதிவு செசிறுவர்கள் தொடர்பில் முகநூலில் பதிவு தசெய்த நிலையில் பொலிஸ் மற்றும் சிறுவர் இல்லத்தை சேர்ந்தவர்கள் வந்த நிலையில் அவர்களிடம் சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சிறுவர்களின் பெற்றோர்கள் ஏன் இன்னும் அவர்களால் தேடவில்லை என்ன நடந்தது இவர்களுக்கு இவர்களின் தாய் தந்தை யார் எங்கே எனப்து போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
அதேவேளை சமூகத்தில் வறுமை, போதை பழக்கம், கணவன் மனைவி சண்டை பிரிவு ,தாய் தந்தை மரணம் பொன்ற காரணங்களினால் பாதிக்கப்படுவது சின்னஞ்சிறு குழந்தைகளே.