ஓமானில் சிக்கியுள்ள இலங்கைப் பெண்கள் குறித்து முக்கிய அறிவிப்பு!
ஓமானில் வேலைக்கென சென்று பல அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில், இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது தங்கியுள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பிலான அறிவிப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 77 இலங்கைப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
அவர்களில் 12 பேர் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை ஓமன் மற்றும் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.