நடிகர் ஆர்யாவை விடாது துரத்தும் இலங்கைப்பெண் விவகாரம்!
அண்மையில் ஜெர்மனியில் வசித்து வரும் இலங்கைப் பெண் வித்ஜா சில மாதங்களுக்கு முன் நடிகர் ஆர்யா தன்னைத் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி 70 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்து விட்டார் என ஜனாதிபதி பிரதமர் அலுவலகம் வரை புகார் அளித்திருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த புகார் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் , ஆர்யா மோசடி தொடர்பில் சென்னை காவல் துறை விசாரித்து சில தினங்களுக்கு முன் இருவரைக் கைது செய்தது. சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான்இ முகமது ஹுசைனி என்ற அந்த இருவரும் நடிகர் ஆர்யாவின் குரலில் பேசி வித்ஜாவிடம் பணம் பறித்ததாகப் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
இதனையடுத்து நடிகர் ஆர்யாவும் உடனடியாக காவல்துறைக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்ய இந்த வழக்கே முடிந்து விட்டது போல் ஒரு தோற்றம் உருவானது. ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இலங்கைப்பெண்ணான வித்ஜா ஆர்யாவிடம் தொடர்ந்து விசாரிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வித்ஜாவின் வழக்கறிஞர் கூறுகையில்,
''போலீஸின் முதல் தகவல் அறிக்கையில் ஏ1 ஆர்யா ஏ2 அவரது அம்மா ஏ3 முகமது அர்மான் ஏ4 முகமது ஹுசைன்னுதான் இருக்கு. ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியைக் காப்பாற்ற நினைச்சு தப்பு செஞ்சது நான் மட்டும்தான்னு சொன்னா அதை எப்படி சட்டம் ஏத்துக்கும்? வித்ஜா ஒரு டாக்டர். நடிகர் ஆர்யாவைத் தெரியாம அவரைப் பார்க்காம எப்படிங்க அவ்வளவு பெரிய பணத்தைக் கொடுப்பாங்க?
ஆர்யா கூட வீடியோ கால்ல பேசியிருக்காங்க வித்ஜா. அப்ப வீட்டைச் சுத்திக் காண்பிச்சிருக்கார் ஆர்யா. அந்த வீடியோ ஸ்கிரீன் ஷாட்டைக் கேட்டு வாட்ஸ்அப் சிஇஓ-க்கு கடிதம் எழுதியிருக்காங்க வித்ஜா. அங்க இருந்து அந்த ஆதாரங்கள் கிடைச்ச பிறகு மறுபடியும் போலீஸ்கிட்ட போய் அதையெல்லாம் கொடுத்து உண்மையான குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தராம விட மாட்டோம்'' என்கிற ஆனந்த் ‘’ஆர்யா தன் மீது தப்பில்லைனு சொன்னா 'என் பேர்ல போலி அக்கவுன்ட் தொடங்கியிருக்காங்க’ன்னு பொலிசில் ஒரு புகார் கூடத் தரலையே அது எப்படி’’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை ஆர்யா தன்னுடைய அரசியல் நண்பர்கள் மூலம் வழக்கை முடிக்க நினைப்பதாகவும் அதற்கு சென்னை பொலிஸ் துணை போவதாகவும் சினிமா வட்டாரத்திலேயே பலரும் பேசுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நடிகர் ஆர்யா மற்றும் அவரது தாயாரின் பெயரை போலீசார் திட்டமிட்டு மறைத்தது அம்பலமாகி உள்ளதால் இந்த வழக்கில் தனக்கு உரிய நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக இலங்கை யுவதி வித்யா வேதனை வெளியிட்டுள்ளார்.
https://jvpnews.com/article/actor-arya-case-field-with-again-german-srilankan-1630532299