கனடாவில் கைதான இலங்கை தமிழ் யூடியூபர் ; சுமத்தப்பட்டுள்ள பெரும் குற்றச்சாட்டுகள்
கனடாவின் டொராண்டோ நகரில் தவறான நடத்தையில் ஈடுபட்ட யூடியூபரான 45 வயதுடைய இலங்கை தமிழர் ஒருவர் டொராண்டோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மீது அனுமதியின்றி தனிநபர்களை அணுகி, படம் பிடித்தமை, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

உதவி கோரும் பொலிஸார்
பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 டிசம்பர் 10 திகதிஅன்று பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி 4, 2026 அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 8, 2025 அன்று, டன்டாஸ் தெரு மேற்கு மற்றும் டஃபெரின் தெரு அருகே ஒரு நிகழ்வில் ஒரு பெண் கலந்து கொண்டிருந்தபோது, குறித்த நபர் பெண்ணின் அனுமதியின்றி படம் பிடித்துள்ளார்.
பின்னர் அந்த பெண் அவரை நிறுத்தச் சொன்னபோது, அவர் மோதலில் ஈடுபட்டார்,மேலும் பாதுகாப்பு உத்தரவை மீறி வெளியேற மறுத்துவிள்ளதாக என்று கனேடிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், அதிகாரிகள் அவ்விடத்திற்கு செல்லும் முன்பே குறித்த சந்தேக நபர் வெளியேறியதாகவும் மேலும் அந்த பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ஓகஸ்ட் 21, 2025 அன்று, பிற்பகல் 2:45 மணியளவில், அதே நபர் யூனியன் ஸ்டேஷனில் உள்ள ஒரு ஊழியரை அவர்களின் சம்மதமின்றி அவர்களைப் படம்பிடித்து, அவர்களின் இனம் குறித்து துன்புறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்ததாக செப்டம்பர் 27, 2025 அன்று, பிற்பகல் 3 மணியளவில் டேவிட் பெக்காட் சதுக்கத்தில், இதேபோன்ற சம்பவம் நடந்ததாகவும் அங்கு நின்ற ஒருவர் அணுகி, நிறுத்துமாறு கோரிக்கைகள் விடுத்த போதிலும் படப்பிடிப்பைத் தொடர்ந்துள்ளதுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
டொராண்டோ பொலிஸார் அவரது படத்தை வெளியிட்டு, இவர் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் டொராண்டோ பொலிஸ் சேவையைத் தொடர்பு கொள்ள முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.