மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட தாய்: பாரிய துயரத்தில் மூன்று பிள்ளைகள்!
தலவாக்கலை - வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் இன்று (02-1-2022) காலை தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ரமணி கந்தையான் என்ற பெண்ணுக்கு 3 மூன்று பிள்ளைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,
இதையடுத்து, குறித்த நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.
மேலும் சடலமாக மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா? அல்லது நீர்தேக்கத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா ? அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.