முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் மிகவும் உயரமான மனிதர்!
இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான குறித்த மனிதர் வசித்து வருகின்றார்.
7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டுள்ள குணசிங்கம் கஜேந்திரன் தற்போது இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 45 வயதுடைய இவர் முச்சக்கர வண்டி சாரதியாக இருந்து வருகின்றனர்.
இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாகும்.
தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாகவும், இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை எடுக்க முடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்தில் இருக்கைகள் கிடைக்காதுவிட்டால் பயணிப்பது சிரமமானது எனவும் நீண்ட தூரம் பேருந்தில் பயணிப்பதாக இருந்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


