இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 1 மில்லியன் நஷ்டம்
இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 1 ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரதத் திணைக்களத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குள் ஏற்பட்ட மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான சர்ச்சை காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புதிய பருவச்சீட்டுகளை கொள்வனவு செய்யவில்லை
அரச ஊழியர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் வழங்கப்படும் பருவச்சீட்டுகள், கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாததால், செயல்பாட்டு சிரமங்கள் மற்றும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
ஏப்ரல் மாத பருவச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை புகையிரதத் திணைக்களம் பலமுறை நீடித்ததுடன், அதனை மே மாதத்திலும் பயன்படுத்த அனுமதித்திருந்தது.
இதன் விளைவாக, பல அரச ஊழியர்கள் மே மாதத்திற்கான புதிய பருவச்சீட்டுகளை கொள்வனவு செய்யவில்லை என்பதுடன், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பருவச்சீட்டுகள் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலை காரணமாக பருவச்சீட்டு விற்பனை கணிசமாகக் குறைவடைந்ததுடன், திணைக்களத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.