இலங்கையில் ஒரு வருடத்திற்கு பின் கொடிய நோயால் ஒருவர் உயிரிழப்பு! மீண்டும் பரவுகிறதா?
இலங்கையில் ஒரு வருடத்திற்கு பின்னர் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணம் நேற்றைய தினம் (23-12-2023) கண்டி தேசிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பளை அத்கல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவரே ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கொரோனா நோய்த் தொற்று முடிவுக்கு வந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர், இலங்கையில் இந்த மரணம் புதிதாக பதிவாகியுள்ளது.