விரைவில் வெளியாகவுள்ள வர்த்தமானி: நீதியமைச்சரின் அறிவிப்பு!
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய சட்டம் தொடர்பான நேற்றைய தினம் (07-09-2023) பிற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது, வைத்தியர் விஜயதாச ராஜபக்ஷ, இலஞ்சம் தொடர்பான தற்போதைய சட்டங்கள் பொதுத்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், புதிய சட்டத்தின் மூலம் தனியார் துறையிலும் ஊழல் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவறான தீர்மானத்தை வழங்கியிருந்தாலோ அல்லது பல்வேறு காரணங்களுக்காக வழக்குகளை வாபஸ் பெற்றிருந்தாலோ அதனை விசாரிக்கும் முழு அதிகாரழும் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உண்டு எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.