இலங்கையின் இந்த நிலைக்கு தமிழ் மக்களின் கண்ணீரே காரணம்!

Food Shortages Sri Lankan Tamils Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis
By Shankar Jun 14, 2022 07:17 PM GMT
Shankar

Shankar

Report

இலங்கையில் பஞ்சம் – பட்டினி தலைவிரித்தாடத் தொடங்குகின்றது. வலி. வடக்கில் வளம்கொழிக்கும் விவசாயப் பூமிகளை ஆக்கிரமித்து இன்னமும் தம் வசம் படைத்தரப்பு வைத்துள்ளது.

அந்தக் காணிகளுக்குச் சொந்தக்காரரான எமது மக்கள் அழுது அழுது ஏங்கிய கண்ணீர் – அவர்களின் சாபங்கள்தான் இலங்கையின் இந்த நிலைமைக்குக் காரணம். இப்போதாவது அவர்களின் காணிகளை விடுவித்து சாபவிமோசனம் அடையுமாறு கோருகின்றோம். என வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த நிலைக்கு தமிழ் மக்களின் கண்ணீரே காரணம்! | Sri Lanka Food Crisis Tears Tamils Occupy Lands

இது தொடர்பில் அந்த அமைப்பின் தலைவர் அ.குணபாலசிங்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களே, 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கிலிருந்து விரட்டப்பட்டனர். சொந்த மண்ணுக்குச் செல்வோம் என்ற அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகி 32 வருடங்கள் நிறைவுறுகின்றன.

இலங்கையின் இந்த நிலைக்கு தமிழ் மக்களின் கண்ணீரே காரணம்! | Sri Lanka Food Crisis Tears Tamils Occupy Lands

பாதுகாப்புப் படைகள் வல்வந்தமாகக் கைப்பற்றிய எமது பூமியில் 6,500 ஏக்கரை நிரந்தரமாக கபளீகரம் நோக்குடன் 2013ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எமது போராட்டங்களாலும், தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றத்தாலும் சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் மீள ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிலத்திலும் 500 ஏக்கரை பாதுகாப்புத் தரப்பும், பொலிஸாரும் இன்னமும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர்.

போரே நடக்காத எமது பிரதேசங்களை மீள ஒப்படைக்கும்போது எங்கள் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள் என்று அனைத்துச் சொத்துக்களையும் இடித்தழித்து தரைமட்டமாக்கியே வழங்கினார்கள்.

இலங்கையின் இந்த நிலைக்கு தமிழ் மக்களின் கண்ணீரே காரணம்! | Sri Lanka Food Crisis Tears Tamils Occupy Lands

நாம் காணி விடுவிப்புக்காக போராட ஆரம்பித்த பின்னர்தான் எமது சொத்துக்களை அழித்து துவம்சம் செய்தார்கள். அகதிகளாக அலைந்த நாங்கள், சொந்த மண்ணுக்குத் திரும்பியும் வீடு வாசல்கள் இல்லாது இருக்கின்றோம்.

யாழ்ப்பாணத்தின் தங்கம் என்று சொல்லப்படுகின்ற பலாலியின் வளம்கொழிக்கும் விவசாயக் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. மீன்வளம் நிறைந்த மயிலிட்டிக் கிராமத்தின் அரைவாசிப் பகுதி விடுவிக்கப்படவில்லை.

எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படைத்தரப்பு தாங்கள் விவசாயம் செய்கின்றார்கள். நாங்கள் பட்டினியால் சாக அவர்கள் எங்கள் நிலங்களில் அறுவடை செய்து தங்கள் வயிறு வளர்க்கின்றார்கள்.

இலங்கையின் இந்த நிலைக்கு தமிழ் மக்களின் கண்ணீரே காரணம்! | Sri Lanka Food Crisis Tears Tamils Occupy Lands

தென்பகுதியில் கடந்த மே 9ஆம் திகதி களேபரத்தில் அரசியல்வாதிகள் பலரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்கள் சொத்துக்களை இழந்து ஒரு மாதத்துக்குள்ளேயே இழப்பீடு தருமாறு ஓலமிடுகின்றார்கள்.

ஆனால் எங்கள் சொத்துக்களை இடித்து தரைமட்டமாக்கி வாழ்க்கையை நடுவீதிக்கு கொண்டு வந்தவர்களே அவர்கள்தான். எங்களுக்கு இழப்பீடும் இல்லை மிகுதிக் காணி விடுவிப்பும் இல்லை.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மைதான். நாங்கள் அகதிகளாக அல்லல்படுகின்றோம். அவஸ்தைப்படுகின்றோம். தினம் தினம் கண்ணீர் விடுகின்றோம்.

எங்களின் கண்ணீரும், சாபமும் அவர்களைச் சும்மாவிடாது. நாடே பட்டினியால் சாவடையும் இந்த நிலையில், வளம் கொழிக்கும் எங்கள் மண்ணை விடுவித்து, எங்களின் சாபத்திலிருந்து விமோச்சனம் பெறுமாறு, ஆட்சியாளர்களைக் கோருகின்றோம், என்றுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US