இந்தியாவில் பரவும் புதிய தொற்றால் இலங்கை ஆபத்தா? வைத்தியர்
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பரவும் ஓமிக்ரோனின் புதிய பிறழ்வு தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர விளக்கம் அளித்துள்ளார்.
உலகின் 63 நாடுகளில் பரவி வரும் இ-டு-செவன்-ஃபைவ் என்ற ஓமிக்ரோன் துணை வகை தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.
அந்நாட்டில் பல நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த திரிபு தொடர்பில் பயப்படத்தேவையில்லை என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.