அக்போ யானையை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தவருக்கு ஏற்பட்ட நிலை!
அக்போ யானை ட்ரோன் மூலம் காணொளி எடுக்க முயன்ற நபரொருவர் திரப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் (13-12-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கும்பக்வெல, மீதொடுமுல்ல, குருந்தன்குளம் மற்றும் புத்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் பயன்படுத்திய ட்ரோன் கெமரோவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பிரதான சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், ட்ரோன் கெமரோ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை,, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான அக்போ யானை, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளின் சிகிச்சைக்குப் பின் விடுவிக்கப்பட்டது.
அக்போ யானை தற்போது திறப்பனைச் பகுதியில் உலாவி வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.