விசேட வட்டித் திட்டம் நிறுத்தம்! இலங்கை மத்திய வங்கி அதிரடி
சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புத்தொகைக்கான விசேட வட்டித் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, இந்த நடைமுறை அக்டோபர் 01 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.
நிலையான வைப்பு
சிரேஷ்ட குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைக்கான விசேட வட்டித் திட்டத்தை நிறுத்துவதற்கு செப்டம்பர் மாதம் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் விசேட உயர் வட்டி விகித திட்டத்தின் கீழ், சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு கணக்குகளுக்கு 15% வட்டி விகிதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.