மகனுக்கு எமனான தந்தையின் லொரி ; தந்தை கண்முன்னே நடந்தேறிய கொடூரம்
பலாங்கொடை பகுதியில் லொரியின் சக்கரத்தில் நசுங்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் வீட்டின் முன் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை ஸ்டார்ட் செய்துவிட்டு, பின்னோக்கிச் செலுத்தும் போது, வீட்டில் இருந்த ஒரு சிறுவன் லொரியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை, 1 வயது மற்றும் 7 மாத வயதுடையவர் என்பதுடன் பலாங்கொடையைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.