இலங்கையில் தொடர்ந்து கரையொதுங்கும் கொள்கலன்கள்
ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (03) காலை கொள்கலன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த கொள்கலன் வெள்ளை நிறமுடைய சுமார் 40 அடி நீளமான கொள்கலன் என ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த கொள்கலனாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
அதேவேளை , நேற்று (02) இந்துருவ பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றின் பின்புறக் கடற்கரையில் வெள்ளை நிறக் கொள்கலனொன்று கரை ஒதுங்கியிருந்தது.
நேற்று முற்பகல் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இக்கொள்கலன், நேற்றுமுன்தினம் கொழும்புக்கு அண்மித்த கடற்பகுதியில் கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த வெற்றுக் கொள்கலன் என தெரிவிக்கப்படுகின்றது.