லண்டனிலிருந்து தந்தையின் இறுதி கிரியைக்கு யாழ் வந்த மகன் உயிரிழப்பு! வெளியான காரணம்
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்து வருகை தந்த மகன் கடுமையான மனவேதனையின் காரணமாக மாரடைப்பினால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - காரைநகர் மணற்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு நேற்றையதினம் (18-07-2024) உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்த நிலையில், தந்தையின் மரணம் காரணமாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

யாழில் இருந்து விரட்டப்பட்ட மற்றுமொரு மருத்துவர் ; கிழிக்கப்படும் மருத்துவ மாபியாக்களின் முகத்திரை !
இதன்போது இறுதி கிரியையில் திடீரென மயங்கி கீழே விழுந்து காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அவரது உயிரிழப்புக்கு மாரடைப்பு தான் காரணம் எனவும், ஒரே நேரத்தில் இரண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.