முத்தையன்கட்டு இளைஞரை படையினர் தாக்கவில்லை; முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இராணுவ பேச்சாளர்
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருணகமகே நிராகரித்துள்ளார்.
ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர் ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள் என அவர் கூறினார் .
உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை
படையினர் அவர்களில் ஒருவரை கைதுசெய்த நிலையில் ஏனையவர்கள் தப்பியோடியதாகவும், அவர்களை துரத்திச்செல்லவில்லை எனவும் அவர் கூறினார்.
இராணுவதலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கிய நிலையில் மூன்று படையினர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்த அவர், எவரும் கபில்ராஜின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கரெஜிமன்டின் 12வது பட்டாலியனின் முகாம் அது 2025 ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டவரை பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றன,
ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரால் கைவிடப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்வதற்காக சிலரை அழைத்த பின்னர் இராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிக்கப்படுவது முற்றிலும் பொய் எனவும் இராணுவ பேச்சாளர் வருணகம தெரிவித்துள்ளார்.