இலங்கை அணி அபார வெற்றி: போட்டிக்கு நடுவே வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்
உலகக்கோப்பை ரி20 தொடரில் இன்றைய தினம் இடம்பெற்ற இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை சேர்த்தது. இதில் அதிகப்பட்சமாக முகமது நயிம் 62 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹிம் ஓட்டங்களை எடுத்தனர்.
இந்த போட்டியில் நடுவில் இலங்கை பந்துவீச்சாளர் லஹிரு குமார (Lahiru Kumara) பந்துவீச்சில் வங்கதேச பேட்ஸ்மேன் டிடன் தாஸ், (Liton Das) ஆட்டமிழந்தார். இதன்பின்னர் களத்தில் குமார, தாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது, பின்னர் பீல்டிங்கில் இருந்த மற்ற இலங்கை வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்துவிட்டனர்.
Feel the heat of #ICCT20WorldCup2021 some harsh words exchanged between Liton Das & Lahiru Kumara after Das was caught at mid-off in #SlvsBan. Upcoming #PakvsIndia pic.twitter.com/eUbVfm5q3Z
— Haroon Janjua (@JanjuaHaroon) October 24, 2021
இதனையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடங்க வீரர்கள் குசல் பெரேரா 1 ஓட்டங்கள் பத்தும் நிசங்க 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய சரித் அசலன்க ஒருபுறம் அதிரடியாக ஆடி வந்தார், மறுபுறம் அவிஷ்கா பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்கா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து சரித் அசலன்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ கூட்டணியாக சேர்ந்து அதிரடியாக ஆடி இலங்கை அணியை வெற்றிபாதைக்கு கொண்டு சென்றனர். பின்னர் 18.5 ஓவரில் 172 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணி வெற்றிபெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக சரித் அசலன்க 49 பந்துகளில் 80 ஓட்டங்களும், பானுக்க ராஜபக்ஷ 31 பந்துகளில் 53 ஓட்டங்களும் எடுத்தனர்.